ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறு தொழில் துவங்கும் வகையில், வங்கிகள் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் நாகராஜன் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.
அவர் பேசுகையில்,''மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழ்வாதார, பொரு ளாதார மேம்பாடு திட்டங்களை வடிவமைத்து, கடன் வழங்க, வங்கிகள் முன் வரவேண்டும். இதற்கான வழிமுறைகளை அமைத்து தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளில் விற்பனை பொருள் அங்காடி, உணவகம் அமைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்,'' என்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருண்மணி, மகளிர் திட்ட இயக்குனர் பிரேமா பங்கேற்றனர்.