sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாநகர நல அலுவலர் மீது ஆய்வாளர்கள் புகார்

/

மாநகர நல அலுவலர் மீது ஆய்வாளர்கள் புகார்

மாநகர நல அலுவலர் மீது ஆய்வாளர்கள் புகார்

மாநகர நல அலுவலர் மீது ஆய்வாளர்கள் புகார்


ADDED : ஜூன் 26, 2024 06:52 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : பணி செய்ய விடாமல் தடுப்பது,அநாகரீகமாக பேசுவது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பரிதாவாணி மீது பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,அலுவலர்கள் மேயரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பொது சுகாதாரபிரிவில் பணியாற்றும் சுகாதார அலுவலர்கள்,ஆய்வாளர்கள் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதியிடம் கொடுத்த மனுவில், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி எங்கள் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக செயல்படுகிறார். ஏரியா வாரியாக பணம் வசூலிக்க கூறுகிறார். அதை கேட்காமல் இருப்பவர்களை அவமரியாதையாக பேசுகிறார். பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார்.

அலுவலகத்தில் சம்பந்தமில்லாத நபரை வைத்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

மாநகர நல அலுவலர் பரிதாவாணி கூறுகையில்'' சுகாதார அலுவலர்கள்,ஆய்வாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய். நான் முறையாக தான் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என் பெயரை சொல்லி ஒரு சில சுகாதார அலுவலர்கள் பொது மக்களிடம் பணம் வாங்கி உள்ளனர்.

இது எனக்கு தெரிந்தது. கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளேன் ''என்றார்.






      Dinamalar
      Follow us