ADDED : ஆக 27, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மதுக்காரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோயிலில் திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று காலை பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை , சுவாமி தேவியருடன் எழுந்தருள வீதி உலா நடந்தது. பெண்கள் கோலாட்டத்துடன் கும்மியடித்தல், உறியடித்தல், விளையாட்டு போட்டிகள் நடந்தது. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கபட்டது.