ADDED : மே 01, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : அ.தி.மு.க., சார்பில் ஆயக்குடி பேரூராட்சி, பழநியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கன்னிவாடியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார்.
அவைத் தலைவர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன் திறந்து வைத்தார். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் மயில்வாகனன், மீனவரணி இணை செயலாளர் சின்னையா, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி பங்கேற்றனர்.