/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்
/
விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்
ADDED : செப் 08, 2024 05:12 AM
நிலக்கோட்டை: விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்ததை தொடர்ந்து பெண்கள் கை குழந்தைகளுடன் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
விளாம்பட்டி முத்தாலபுரத்தில் இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஷர்மிளா அனுமதி இன்றி சிலை வழிபடக்கூடாது என கூறி சிலையை பறிமுதல் செய்தார். அப்பகுதி பெண்கள், ஆண்கள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். விநாயகர் சிலையை வைப்பதற்கு அனுமதியும் ,சிலையை வழங்க வேண்டும் என கோரி விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் மாற்று ஏற்பாடு செய்தததால் கலைந்து சென்றனர்.