நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:வடமதுரையில் அனைவருக்கும் கல்வி இயக்கம், ரீடு ஏஜன்சி இணைந்து மாற்றுத் திறன் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தின.வள மைய மேற் பார்வையாளர் ஆல்பர்ட் லோபோ தலைமை வகித்தார்.
அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரங்கநாயகி முன்னிலை வகித்தார். வேடசந்தூர்: மாற்று திறன் குழந்தைகள் கல்வித்திட்ட விழிப்புணர்வு ஊர்வலம், வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் ரவி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். மாற்று திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெகதீசன், மரிய விக்டர், வெள்ளிமலை, சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

