ADDED : ஏப் 18, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தாசில்தார் சுகந்தி தலைமை வகித்தார்.மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர் முன்னிலை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மனித சங்கிலி அமைத்து வண்ண பதாகைகள் மூலம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், நுாறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பிரேம்குமார், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் கலந்து கொண்டனர்.

