ADDED : ஆக 08, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஆத்துமேட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மேகலா முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் அமராவதி வரவேற்றார்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதகலா பேசினார். டாக்டர்கள் லோகநாதன், பொன்மகேஸ்வரி,அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட மேலாளர் சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பங்கேற்றனர்.