நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம், : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கூறி ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்டத் தலைவர் அஜ்மல்கான் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் அம்கா முன்னிலை வகித்தார். பேச்சாளர் சல்மான்பாரிஷ், மாவட்ட துணைத் தலைவர் சாந்து முகமது, நகர நிர்வாகி சர்ப்புதீன், மாணவரணி அமைப்பாளர் ஹபீப் ரஹ்மான் கலந்து கொண்டனர்.