ADDED : மே 24, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் மல்வார்பட்டி விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பட்டாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் சர்ச் பாதிரியார்கள் சுரேஷ்சகாயராஜ், ஜாஸ்பர், ஆலய மேலாளர் ரொசாரியோ சீர்வரிசையுடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.
வடமதுரை : அய்யலுார் வளவிசெட்டிபட்டி வேலக்கம்மாள், நாகையசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 21ல் முளைப்பாரி, தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய விழாவில் 4 கால யாக பூஜைகள் நடந்தன.
நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தர்மலிங்கபுரம் கணேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தினர். மதியம் சுவாமி மாடுகளின் ஓட்டப்பந்தயம் நடந்தது.