sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து

/

சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து

சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து

சேதமான ரோடுகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தலாமே: மேடு, பள்ளங்களால் தொடர்கிறது விபத்து


ADDED : மார் 05, 2025 06:37 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரோடுகளில் ஆபத்தான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடு சேதமடைந்துள்ளது.

இதுபோன்று ரோடுகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர். கிராம ரோடுகள் முதல் நகர், மலை பகுதி, நெடுஞ்சாலை ரோடுகள் என அனைத்து வகையான ரோடுகளிலும் இதுபோன்ற பள்ளங்கள் உள்ளன. பெரும்பாலான பாலங்கள், மேம்பாலங்களில் ஆபத்தான பள்ளங்களும், மழைநீர் வெளியேறுவதற்காக வைக்கப்பட்டுள்ள துவாரங்களில் குழந்தைகள் விழும் அளவிற்கு பெரிய அளவில் உள்ளது.இது ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இது போன்ற துவாரங்களில் சிறுவர்கள் உள்ளே விழுந்துவிடாத வண்ணம் வலைகள் அமைக்க வேண்டும். மழையின் போது இது போன்ற பள்ளங்களில் டூவீலர் முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்குவதும், சிறுகாயங்கள் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுகிறது.குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் தெரியாததால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் செல்வதாலும், தரமற்ற ரோடு பணிகளால் ரோடுகளில் தண்ணீர் தேங்குவதாலும் ரோடுகள் சேதமாகிறது.மாவட்டம் முழுவதும் உள்ள சேதமடைந்த ரோடுகளை கண்டறிந்து உடனடியாக சீரமைப்பது அவசியமாகிறது. துறை அதிகாரிகளும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us