/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்; 'ஐலசா' போட்ட பயணிகள்
/
நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்; 'ஐலசா' போட்ட பயணிகள்
நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்; 'ஐலசா' போட்ட பயணிகள்
நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்; 'ஐலசா' போட்ட பயணிகள்
ADDED : மே 29, 2024 05:24 AM

நத்தம், : -நத்தத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு டவுன் பஸ்சை பயணிகள் தள்ளி சென்று ஓரமாக நிறுத்தினர்.
நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு 40க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. சிறிது துாரம் சென்றதும் பழுதாகி நடுவழியில் நின்றது. பயணிகள் பின்னால் இருந்து தள்ளியும் ஸ்டார்ட் ஆகவில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக நடுவழியில் நின்ற பஸ்ஸை பயணிகள் தள்ளி ஓரமாக நிறுத்தினர்.
இதன் பின் பயணிகள் மீண்டும் நத்தம் பஸ் ஸ்டாண்டிற்கே நடந்தே சென்றனர். பயணிகள் குறித்த நேரத்திற்கு பயணம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். நத்தம் பகுதியில் அரசு பஸ்கள் குறிப்பாக டவுன் பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர்கிறது. அரசு பஸ்களை முறையாக பராமரிக்க போக்குவரத்து நிர்வாகம் முன் வர வேண்டும்.