sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்க வேண்டியது ....அவசியம்: கோடை நெருங்குவதால் கவனம் தேவை

/

உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்க வேண்டியது ....அவசியம்: கோடை நெருங்குவதால் கவனம் தேவை

உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்க வேண்டியது ....அவசியம்: கோடை நெருங்குவதால் கவனம் தேவை

உள்ளூர் நீராதாரங்களை பராமரிக்க வேண்டியது ....அவசியம்: கோடை நெருங்குவதால் கவனம் தேவை

1


ADDED : மார் 10, 2025 05:32 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கோடைகாலம் நெருங்கியநிலையில் குடிநீர் தேவையை சமாளிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரங்களை முறையாக பராமரித்து, குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு இருக்கின்ற நீரையும், அவ்வப்போது பெய்யும் மழைநீரையும் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது.

மாவட்டம் முழுவதும் 5 வருடங்களுக்கு முன் கணக்கெடுப்பின் படி பொதுப்பணித்துறை குளங்கள் 295, ஊராட்சி குளங்கள் 605, ஊராட்சி ஒன்றிய குளங்கள் 435, டவுன் பஞ்சாயத்து குளங்கள் 11, தனியார் குளங்கள் 11 என 1401 உள்ளன. ஆனால் பல்வேறு காரணங்களால் குளங்கள் துார்வாரப்படாமலும், முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி குளங்கள், கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடங்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. குறிப்பாக குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த ஆறு உருவாகும் இடத்தில் இருந்தே கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. காமாட்சிபுரம் ஆவினக்குளம் கருவேல செடிகள் அதிகளவில் இருப்பதால், நீர் உறிஞ்சி அவை நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் பயிர்களுக்கு வழியில்லை. கால்வாய்கள் சரிவர வெட்டாததால் தண்ணீர் எந்தப்பக்கம் செல்லும் என்றே கணிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலன நீர்வழித்தடங்கள், குளங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கின்றன. ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுங்க

ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் கேட்பாரற்று உள்ளன. விவசாயம் பொய்ப்பதற்கும், நிலத்தடி நீர் வற்றுவதற்கும், பொது மக்களின் தண்ணீர் பஞ்சத்திற்கும் குளங்களை பராமரிக்காமல் விடுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புமே காரணமாக இருக்கிறது. வருவாய்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என அனைத்தையும் ஒன்றிணைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சேமிக்க வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவராஜன், பா.ஜ., தொழில்துறை பிரிவு, முன்னாள் மாவட்ட தலைவர், திண்டுக்கல்.

........................






      Dinamalar
      Follow us