ADDED : மே 06, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : பாளையம் பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பாளையம் பேரூர் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர்,இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். நீர் மோர், ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டது. குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி சிவக்குமார், நிர்வாகிகள் ராஜேஷ், ரவி, விஜி, மாரியப்பன் பங்கேற்றனர்.