ADDED : ஜூன் 28, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பால், பழம், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள வாராஹி அம்மன் கோயிலிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.