/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கணவாய் கருப்புசுவாமி கோயிலில் வழிபாடு
/
கணவாய் கருப்புசுவாமி கோயிலில் வழிபாடு
ADDED : ஆக 07, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசுவாமி கோயிலில் வாடகை கார் உரிமையாளர்கள் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கினர். இக் கோயிலில் புதிய வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாகனங்களுக்கு சிதறு தேங்காய் உடைத்து பூஜை, ஆடி மாதத்தில் ஆடுகள் வெட்டி பூஜை செய்வதும் வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கோபால்பட்டி சுற்றுப்பகுதி வாடகை கார்கள் வைத்திருப்போர் 100க்கு மேற்பட்டோர் கார், டிராவல்ஸ் வாகனங்களுடன் கோயிலுக்கு வந்தனர். ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.