ADDED : மார் 13, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் , சுற்றுப்பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி திருச்சியை சேர்ந்த தனியார் டிரஸ்ட் ஒன்றிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மாநகர அலுவலர் ராம்குமார் கூறியதாவது : 2 மாதங்களுக்கும் மேலாக தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில் பணிகள் முழுமையடையும் என்றார்.