sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பி செப். 27ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

/

அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பி செப். 27ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பி செப். 27ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பி செப். 27ல் சென்னையில் போராட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு


ADDED : செப் 17, 2024 08:26 PM

Google News

ADDED : செப் 17, 2024 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:''ஊராட்சி செயலாளர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (செப்.18) அரசுக்கு 40 ஆயிரம் கடிதங்கள் அனுப்பி செப்.27ல் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.என். பரமேஸ்வரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அவர் கூறியதாவது: ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் 1996ல் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் சிறப்புக் காலமுறை ஊதிய விகிதத்தில் இருந்து கால முறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர். இது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் பதிவு எழுத்தர் ஊதிய விகிதம். ஆனால் இதுவரை அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கவில்லை.

எங்களின் மாநில அமைப்பு மூலம் ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து மாநில அளவிலான இரண்டு கட்ட போராட்ட நடவடிக்கையில் 2ம் கட்டமாக மாவட்ட தலைமை இடங்களில் இருந்து முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலர், இயக்குநருக்கு இன்று (செப்.18) 40 ஆயிரம் கடிதங்களை அனுப்புகிறோம். இதை தொடர்ந்து தற்செயல் விடுப்பு எடுத்து செப்.27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us