/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே டூ வீலரில் சென்ற 5 பேர் கார் மோதிய விபத்தில் இறப்பு
/
ஒரே டூ வீலரில் சென்ற 5 பேர் கார் மோதிய விபத்தில் இறப்பு
ஒரே டூ வீலரில் சென்ற 5 பேர் கார் மோதிய விபத்தில் இறப்பு
ஒரே டூ வீலரில் சென்ற 5 பேர் கார் மோதிய விபத்தில் இறப்பு
ADDED : ஆக 03, 2024 07:57 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 25. இவரது மனைவி- அருணா, 22. இவர்களுக்கு ரக்சன் ஜோ, 7, ரக் ஷிதா, 4, என, இரு குழந்தைகள் இருந்தனர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேற்று மதியம், 12:30 மணியளவில் மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் சரோஜா ஆகியோருடன் ஒரே டூ வீலரில் இரண்டலப்பாறையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால், மற்றொரு டூ வீலரில் நொச்சொடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி வந்து கொண்டிருந்தார்.
குள்ளனம்பட்டி அடுத்த நல்லாம்பட்டி அருகே வந்தபோது, துவரங்குறிச்சியை சேர்ந்த பிரவீன், 22, ஓட்டி வந்த கார் டூ வீலர்கள் மீது மோதியது. இதில், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அவரது மனைவி, இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சரோஜா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயத்துடன் குழந்தைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.