/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்
/
புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்
ADDED : மே 17, 2024 05:21 AM

வாகன ஓட்டிகள் அவதி
திண்டுக்கல்- பழைய கரூர் ரோட்டில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் .யோகேஷ், திண்டுக்கல்.
..........---வளைவில் ஜல்லிக் கற்கள்
ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் வளைவுகளில் ஜல்லிக் கற்கள் சிதறி கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - பெருமாள் ஒட்டன்சத்திரம்.
..................-----மறுகால் கட்டமைப்பு சேதம்
சின்னரெட்டியபட்டி குஞ்சிலி மடையில் மறுகால் கட்டமைப்பு சேதமடைந்து கிடக்கிறது. எஞ்சிய பகுதியும் சேதமுற்றால் மழை நீர் வீணாக வெளியேறிவிடும் .சேகர், வடமதுரை.
.............------
திறக்கப்படாத கழிப்பறை
நொச்சிஓடைப்பட்டியில் சுகாதார பொது கழிப்பறை கட்டி பலமாதங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏ. சரவணன், நொச்சிஓடைப்பட்டி.
..............-------
குப்பையால் நோய்
கும்பரையூர்- பூலத்துார் ரோட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்ணன், கும்பரையூர்.
............-------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் கோவிந்தசாமி நகரில் சாக்கடையில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது . கால்வாயை துார்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.
..............--------பஸ் ஸ்டாண்டில் மண்குவியல்
நிலக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மண்குவிந்து புதர் மண்டி கிடக்கிறது .இதனால் பாம்பு பூச்சுகள் இருப்பிடமாக உள்ளது. மண்குவியலை அகற்ற வேண்டும் .க.ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
..........

