sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன ஆம்புலன்ஸ்

/

பழநியில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன ஆம்புலன்ஸ்

பழநியில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன ஆம்புலன்ஸ்

பழநியில் பயன்பாட்டிற்கு வந்தது நவீன ஆம்புலன்ஸ்


ADDED : ஏப் 26, 2024 02:12 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி முருகன் கோயில் வரும் பக்தர்களின் மருத்துவ அவசர தேவையை பூர்த்தி செய்ய வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது.

இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மலை பாதை, கூட்ட நெரிசலில் செல்லும் போது சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இவர்களுக்கு முதலுதவி அளிக்க முருகன் கோயில், அடிவாரம் வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை இடும்பன் கோயில் அருகே மருத்துவமனைகள் உள்ளன.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிக பிரச்னை ஏற்படுகிறது. இவர்களுக்கு அவசர முதலுதவி சிகிச்சை கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையங்களில் அளிக்கப்படுகிறது. ஆனால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பழநி முருகன் கோயில் சார்பாக ரூ.26 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் சேவை பக்தர்களின் வசதிக்காக வழங்கப்பட்டது. இதில் அவசர உதவிக்கான 30 வகையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாத விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள்,அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us