/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுத்தெருவில் மின்கம்பம்; வசதிகள் இல்லாத மயானம்; பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு
/
நடுத்தெருவில் மின்கம்பம்; வசதிகள் இல்லாத மயானம்; பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு
நடுத்தெருவில் மின்கம்பம்; வசதிகள் இல்லாத மயானம்; பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு
நடுத்தெருவில் மின்கம்பம்; வசதிகள் இல்லாத மயானம்; பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 3 வது வார்டு
ADDED : ஜூன் 08, 2024 05:54 AM

ஒட்டன்சத்திரம் : அடிக்கடி மூடப்படும் பொது சுகாதார வளாகம், சேதமடைந்த தரைமேல் தொட்டி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன.
சங்குபிள்ளைபுதுார், ஏ.பி. காலனி, கே.கே.நகர், ஆர்.எஸ்.பி நகர் பகுதிகளை உள்ளடக்கிய
இந்த வார்டில் கே கே. நகர் பகுதியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வார்டுக்குள் குடிநீர் பிரச்னை இல்லை. ஏ.பி. காலனிக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் போதுமான வசதிகளை ஏற்படுத்தி சுற்று சுவர் கட்ட வேண்டும்.ஏ.பி.காலனி வடக்கு பகுதியில் உள்ள சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்துள்ளது. இதனை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குபிள்ளைபுதுாரில் நடுத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இதனால் இந்த தெருவழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. கே.கே.நகர் பகுதியில் ரோடு வசதி இல்லை. வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்குகிறது. ஏ.பி. காலனி பொது சுகாதார வளாகம் பயன்பாட்டில் உள்ளது. இருந்த போதிலும் சுத்தமின்மை காரணமாக அடிக்கடி மூடப்படுகிறது. சுகாதார வளாகத்தை நிரந்தரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் தேவை
வீராங்கன், அ.தி.மு.க., வார்டு செயலாளர்:ஏ பி காலனி, பெரியாஞ்சிப்பட்டி, நாகணம் பட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். கே.கே. நகர் பகுதியில் உள்ள ஓடையில் செடி கொடிகள் புல் பூண்டுகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதனை துார்வார வேண்டும். இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். சாக்கடையில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
சாக்கடை வசதி இல்லை
எம்.ஆறுமுகம், தேசியவாத காங்., மாவட்ட தலைவர், சங்கு பிள்ளை புதுார்: சாக்கடைகளை புதிதாக கட்ட வேண்டும். சங்குபிள்ளைபுதுாரில் தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் இன்னும் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். தரை மேல் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
செல்வராஜ், கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக கே.கே. நகரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கும் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. ஏ.டி.காலனி வடக்கு பகுதியில் புதிதாக சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கற்கள் , கண்ணாடி பாட்டில்கள் போடப்பட்டு அசுத்தம் செய்யப்படுகிறது. இவை அகற்றப்பட்டு உடனே திறந்து விடப்படுகிறது. தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் சாக்கடைகள் அமைக்கப்படும் என்றார்.

