/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்துறைக்கு போக்கு காட்டும் ஒற்றை யானை
/
வனத்துறைக்கு போக்கு காட்டும் ஒற்றை யானை
ADDED : செப் 02, 2024 12:49 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் போக்கு காட்டும் ஒற்றை யானையால் வனத்துறை திணறி வருகின்றனர்.
கே.சி.பட்டி பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த யானை கொடலங்காடு, கடுகுதடி வனப்பகுதியில் இரு வாரமாக முகாமிட்டு அருகில் உள்ள குன்னவழி, இடைமலை, பட்லங்காடு பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில்உள்ள சவ்சவ் பந்தல், காபி, வாழை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் ஒரு வாரமாக யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட போதும் இடம் பெயராது அந்த யானை போக்கு காட்டுகிறது.
யானை நடமாட்டத்தால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்லாமல் தவிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,யானைகள் சேதப்படுத்திய விவசாய பயிர்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கும் பணியை செய்கின்றோம்.இரவு, பகலாக யானை நடமாட்டத்தை கண்கானித்து வருகிறோம் என்றார்.