/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா
/
நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா
நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா
நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா
ADDED : ஆக 15, 2024 04:56 AM

நத்தம் : நத்தம் அருகே நடுவனுார் கருப்புசுவாமி கோவில் ஆடி படையல் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடந்தது.
நத்தம் அருகே நடுவனுாரில் உள்ள கருப்பசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி படையல் விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 25-க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.