ADDED : ஜூன் 21, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்; கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் பல வாகனங்கள் உருக்குலைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் தொடர்புடைய வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். வேன் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.