sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுற்றுசுவர் போன்ற வேகத்தடையால் விபத்துக்கள்

/

சுற்றுசுவர் போன்ற வேகத்தடையால் விபத்துக்கள்

சுற்றுசுவர் போன்ற வேகத்தடையால் விபத்துக்கள்

சுற்றுசுவர் போன்ற வேகத்தடையால் விபத்துக்கள்


ADDED : ஆக 30, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 30, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் குடிநீர்

திண்டுக்கல் அருகே பெரிய பள்ளப்பட்டி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது .இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது .அதிக அளவில் வீணாகுவதால் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி, பள்ளப்பட்டி.

...............------

தடுப்பு சுவர் போல் வேகத்தடை

வேடசந்துார் - அழகாபுரி ரோட்டில் தமுத்துப்பட்டி அரசு துவக்கப்பள்ளி முன்பு தடுப்பு சுவர் கட்டியதைப் போல் வேகத்தடைகளை போட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர் .வேகத்தடையை அகற்ற நெடுஞ்சாலைத் துறை முன் வர வேண்டும். சுந்தரம், வேடசந்துார்.

........------சேதமான மின்கம்பம்

சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சி கல்லறை பக்கத்தில் மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயத்தை தடுக்க உடனடியாக அங்கு புதிய மின்கம்பத்தை நிறுவ மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசன், மடூர்.

...........------கேட் வால்வால் விபத்து

சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வால்வு திறந்த வெளியில் உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது . பாதசாரிகளும் தடுமாறி விழுகின்றனர் .முறையாக மூடி அமைக்க வேண்டும் மணிகண்டன், சின்னாளப்பட்டி.

.............-------புதர் மண்டிய சாக்கடை

திண்டுக்கல் 31வது வார்டு திருமலைசாமிபுரத்தில் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி அப்படியே நிற்கிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது . சுத்தப்படுதத் நடவடிக்கை எடுக்க வேண்டும் வீரப்பன், திண்டுக்கல்.

................-------குப்பையால் குமட்டல்

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுற்றுசூழலும் பாதிக்கிறது . இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு பெரும் நோய் தொற்றுக்கும் வழிவகுக்கிறது .முருகன், திண்டுக்கல்.

........-------கழிவுகள் தேக்கம்

ரெட்டியார்சத்திரம் குட்டத்துப்பட்டியில் சாக்கடை சரிவர பராமரிப்பதில்லை. கழிவுகள் மேவிய நிலையில் அசுத்த நீர் நிரம்பி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் -வரை பாதிக்கின்றனர். சி.ஆறுமுகவேல், குட்டத்துப்பட்டி.

................-----






      Dinamalar
      Follow us