ADDED : மே 13, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி விழா நடந்தது. அதில் ருத்ர ஜபம், கணபதி ஹோமம், ஆவஹந்தி யோமம், வசோர்தாரா ஹோமம் நடந்தது.
யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலையம்புத்துாரில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. ஆதி சங்கரர் திருவுருவ சிலை வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.