ADDED : மார் 13, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதி கபாளீஸ்வரன் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை
,தயார் செய்த ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகையனுக்கு ரூ. 20 ஆயிரம், உதயசூரியன், சந்திரசேகரன், கந்தசாமிக்கு தலா ரூ.10 ஆயிரம், விஷ்ணுசித்துக்கு ரூ.30 ஆயிரம், ஆத்துார் ரெட்டியார்சத்திரம் பகுதிகளை சேர்ந்த செல்வம், ராம்பிரசாத், ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம், லிங்குசாமிக்கு ரூ.10 ஆயிரம், தொப்பம்பட்டி மஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.