ADDED : ஜூலை 21, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: மதுரையில் சகோதயா பள்ளிகளின் சார்பில் நடந்த கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெண்களுக்கான 14 ,17 வயது பிரிவில் முதல் இடம், 14 ,19 வயது ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். வென்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.