ADDED : பிப் 28, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி மாத அமாவாசை நடந்தது.இதையொட்டி முருகபெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
ராஜாங்க திருக்கோலத்தில் முருகன் அருள்பாலித்தார். மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரம், வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.