ADDED : ஜூன் 15, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர் ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் துவங்கிய ஊர்வலம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்,காமராஜர் சிலை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனையில் முடிந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு,ரத்த வங்கி மருத்துவ அலுவலர் லில்லி பங்கேற்றனர். மாவட்டத்தில் அதிகளவில் ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.