ADDED : செப் 01, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு , கண்காணிப்பு மையத்தின் சார்பாக திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுஷ் மருந்துகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் மாணவிகளுக்கு பாதுகாப்பான ஆயுஷ் சிகிச்சை முறைகள், தரமான ஆயுஷ் மருந்துகளை கண்டறிந்து பயன்படுத்துவது போலி விளம்பரங்கள், மருந்துகள் ,வைத்தியர்களை கண்டறிந்து தவிர்த்துக் கொள்வது குறித்து எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.