ADDED : மே 29, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இக்கோயில் விழா மே 7 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி 15நாள் நடந்தது. சுவாமி உலா வருதல், திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சக்தி கரகம் எடுத்தல், பொங்கல் , அக்னிசட்டி , பறவைக் காவடி நடந்தன. இதை தொடர்ந்து நேற்று ஏராளமானோர் நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலிருந்து பால்குடம் எடுத்தப்படி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
சப்பர ஊர்வலத்தில் சுவாமி நகர் வலமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.