/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஸ்ரீராமபுரத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
/
ஸ்ரீராமபுரத்தில் பா.ஜ., பொதுக்கூட்டம்
ADDED : ஆக 02, 2024 06:36 AM
கன்னிவாடி : ஆத்துார் தொகுதி பா.ஜ., சார்பில் லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்ரீராமபுரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு நிர்வாகிகள் ரவிபாலா, கணேசன், போஸ், மாவட்ட செயலாளர் புதுமைராஜா, துணை தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் உடுப்பி கங்காதரன் வரவேற்றார். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் பேசினார்.
தரவுதள மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் லட்சுமணமணிகண்டன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ஆத்துார்மனோகரன், சரவணன், முத்துசாமி, பெரியமுத்து, ரெட்டியார்சத்திரம் சுப்பிரமணி, கருப்புச்சாமி, தமிழ்வாணன், சித்ரா, சின்னாளபட்டி ராஜ்குமார், விமல்குமார் பங்கேற்றனர்.