/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காற்றில் பறந்த பஸ் கூரை :2 பேர் சஸ்பெண்ட்
/
காற்றில் பறந்த பஸ் கூரை :2 பேர் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 25, 2024 09:58 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று முன்தினம் காற்றில் அரசு பஸ் கூரை பறந்த விவகாரத்தில் முறையாக கவனிக்காத போக்குவரத்து கழக உதவி செயற்பொறியாளர், பராமரிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பழநியிலிருந்து கீரனுாருக்கு நேற்று முன் தினம் அரசு பஸ் சென்ற போது நரிக்கல்பட்டி அருகே காற்றில் அதன் கூரை பறந்தது. இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்து கழகம் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பஸ்சை முறையாக பராமரிக்காத பழநி கிளை உதவி செயற்பொறியாளர், பராமரிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.