/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பைபாஸ் ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் இல்லை சர்வீஸ் ரோடுகள்
/
பைபாஸ் ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் இல்லை சர்வீஸ் ரோடுகள்
பைபாஸ் ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் இல்லை சர்வீஸ் ரோடுகள்
பைபாஸ் ரோட்டில் முக்கிய சந்திப்புகளில் இல்லை சர்வீஸ் ரோடுகள்
ADDED : ஆக 27, 2024 01:39 AM

ஒட்டன்சத்திரம் : லெக்கையன்கோட்டை- பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப் படாமல் இருப்பதால் திண்டுக்கல், மதுரைக்கு செல்ல வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த பைபாஸ் ரோட்டில் தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள், சப்வேக்கள் அமைக்க வேண்டும்.
லெக்கையன்கோட்டை -பொள்ளாச்சி இடையே புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது. அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, குறிஞ்சி நகர் வழியாக இந்த ரோடு செல்கிறது. பைபாஸ் ரோடு முறையான திட்ட மிடுதலுடன் அமைக்கப்படாததால் பல கிராமங்களுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் உள்ளது.
பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் ஒருவழிப்பாதையின் எதிரே பயணித்து ரோட்டை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகிறது. தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் - வேடசந்துார் ரோட்டின் குறுக்கே பைபாஸ் ரோடு குறுக்கிடுகிறது. இந்த ரோட்டின் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்வதற்கு இன்னும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. திண்டுக்கல், மதுரை வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வழி பாதையில் பயணித்து டிவைடரை கடந்து செல்கின்றன.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதனால் எரிபொருள் செலவு அதிகமாவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் சிரமப்படுவது என்னவோ பொது மக்கள் தான். இனிமேலாவது தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் வழித்தடத்தில் திரும்பும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படாததால் கன்டெய்னர் லாரிகள் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இவை முன்னால் சென்று ரிவர்ஸ் எடுத்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும்.
ரவுண்டானாவும் இல்லை
எஸ்.எஸ். சுரேஷ்குமார், தலைவர், மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகளை அமைக்க முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது.
கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் வசதிகளை புறக்கணித்து பைபாஸ் ரோடு போடப்படுகிறது.
முறையான சர்வீஸ் ரோடு இல்லாததால் ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு போடப்பட்டதிலிருந்து இதுவரை வாகன விபத்துக்களில் பலர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். முக்கிய இடங்களில் சர்வீஸ் ரோடுகள் போடப்படாமல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர்.
தாராபுரம் ரோட்டில் கனரக வாகனங்கள் எளிதில் திரும்பும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
தேவை மாற்று ஏற்பாடு
விஸ்வரத்தினம், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை தலைவர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளான் வெட்டி மேம்பாலத்தின் வடக்கே சர்வீஸ் ரோடு இல்லாததால் ஒருவழிப் பயணம் அதிகரித்துள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேம்பாலத்தில் விளக்குகள் இருந்தபோதிலும் அவை எரிவதில்லை.
மேலும் பைபாஸ் ரோட்டில் இருந்து கொல்லப்பட்டி, அதனை சுற்றிய கிராமங்களுக்கு செல்வதற்கு பைபாஸ் ரோட்டை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை உள்ளது.
இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதே போல் குறிஞ்சி நகர் பகுதியில் கிழக்குப் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மேற்கே செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.