நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை குறிக்கோடங்கிபட்டியை சேர்ந்த விவசாயி சுகுமார் 37, 2 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டார்.
தண்ணீரைத் தேடி வரும் காட்டு மாடுகள்,இவரது தோட்டத்தில் உள்ள பெரிய தொட்டியில் தேங்கும் தண்ணீரை குடிக்கிறது.
நேற்று காலை 9:00 மணிக்கு இவரது தோட்டத்து தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன காட்டெருமை கன்று ஒன்று விழுந்து தத்தளித்தது. அய்யலுார் வனத்துறை அதிகாரி ரங்கசாமி தண்ணீர் தொட்டியில் தத்தளித்த காட்டெருமை கன்றை மீட்டு வனத்தில் விட்டனர்.

