ADDED : ஜூலை 26, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி: கோபால்பட்டியில் நத்தம் தொகுதி காங்., சார்பில், ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மெழுகுவத்தி ஏந்திச் சென்ற ஊர்வலம் நடந்தது.
சாணார்பட்டி வட்டார காங்., தலைவர் ராஜ்கபூர் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நத்தம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பழனியப்பன், பழனிச்சாமி, நகரத் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட காங்., நிர்வாகிகள் தாஸ், சின்னச்சாமி, தங்கச்சாமி, ஞானகுமார், ஜின்னா, இளைஞர் காங்., நிர்வாகிகள் ரகுமான், நவாஸ், நிர்வாகிகள் சுப்பிரமணி, பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
