ADDED : ஜூலை 30, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : புத்துார் பூசாரிபட்டியை சேர்ந்தவர் விவசாயி செவத்தியப்பன். இவரது மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள முடிமலை அடிவாரப் பகுதிக்கு அனுப்புவது வழக்கம்.
இவை தானாக மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும். இந்நிலையில் இரண்டு மாடுகளை காக்காயனுாரை சேர்ந்த சிவர் வேனில் ஏற்றி கடத்தி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

