/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டி விழாவில் சலக எருது
/
சின்னாளபட்டி விழாவில் சலக எருது
ADDED : மே 30, 2024 04:09 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை பொம்மையசாமி, வீரமல்லம்மாள் ஜக்கம்மாள் கோயில் திருவிழா மே 19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மே 27-ல் கணபதி ஹோமம், பொங்கல் வழிபாடு, பிருந்தாவன தோப்பில் இருந்து கரகம் பாலித்தலுடன் சக்தி நீர் கலச ஊர்வலம் நடந்தது.
மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனையுடன் சுவாமி பெட்டி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சலக எருது விடுதல் நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்களுக்கு உறவினர்கள் மரியாதை அளித்தலுடன் கோயில் தெருவில் 3 முறை மாடுகள் விரட்டபட கோயிலை வந்தடைந்தன.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு தலைவர் பத்மநாபன், செயலாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.