/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேத்துார் செல்வமுத்து மாரியம்மன் கோயில் விழா
/
சேத்துார் செல்வமுத்து மாரியம்மன் கோயில் விழா
ADDED : மே 01, 2024 07:26 AM

செந்துறை : செந்துரை அருகே சேத்துார் செல்வமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நத்தம் அருகே சேத்துாரில் உள்ள செல்லமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 21ல் கரந்தமலை அய்யானார் கோயில் சென்று தீர்த்தம் ஆடி அம்மனுக்கு காப்பு கட்டு விரதத்துடன் தொடங்கியது. தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமி கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பூக்குழி , மாவிளக்கு, பால்குடம் , தீச்சட்டி , கிடாய் வெட்டுதல்,படுகளம், அங்கப்பிரதட்சனம் செய்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.