/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழந்தை திருமணம்: மூவருக்கு ஆயுள்
/
குழந்தை திருமணம்: மூவருக்கு ஆயுள்
ADDED : ஆக 30, 2024 08:36 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த கூலித்தொழிலாளி,அதை ஏற்பாடு செய்த அவரது பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நத்தம் கொண்டையம்பட்டி சின்னகைலாசபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி எழுவன்25. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.
இந்நிலையில் 2023ல் அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும் 15 வயது
சிறுமியை எழுவனின்,பெற்றோர்களான சின்னையா56,விஜயா51,ஆகியோர் எழுவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தகவலை அறிந்த நத்தம் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து எழுவன்,சின்னையா,விஜயா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன்,குற்றவாளிகள்
எழுவனுக்கு ஆயுள் தண்டனை,ரூ.1,56 லட்சம் அபராதம்,அவரது பெற்றோர்களான சின்னையா,விஜயாவுக்கு தலா ஆயுள் தண்டனை,தலா ரூ.1,00,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிரஞராக மைதிலி ஆஜரானார்.

