/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளிக்கு ஆயுள்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : ஆக 29, 2024 02:40 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி பிச்சைமுத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நிலக்கோட்டை விருவீடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிச்சைமுத்து 38. 2024 மே மாதத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். நிலக்கோட்டை மகளிர் போலீசார் பிச்சைமுத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி வேல்முருகன், குற்றவாளி பிச்சைமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.