/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேளாங்கண்ணி விழாவுக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
/
வேளாங்கண்ணி விழாவுக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
ADDED : ஆக 24, 2024 04:28 AM

வடமதுரை: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் ஆண்டு திருவிழாவிற்காக திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வடமதுரை வழியே பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இத்திருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை நடக்க உள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வேளாங்கண்ணி நோக்கி வடமதுரை வழியே நான்கு வழிச்சாலையில் செல்கின்றனர்.
இவர்களுள் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் மாதா பாடல்களை ஒலிபரப்பியப்படி செல்கின்றனர்.
சாணார்பட்டி வங்கமனுாத்து பகுதியை சேர்ந்தவர்களும் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர்.
பாதியாத்திரை குழுவினர் கூறுகையில், 'மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே ஆக.29ல் வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் திட்டமிட்டு புறப்பட்டுள்ளோம். அன்று நடக்கும் கொடியேற்று விழாவில் பங்கேற்று வழிபட்டு ஊர் திரும்புவோம்'என்றனர்.

