/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகா கோஷங்களுடன் நிறைவு பெற்றது
/
முருகா கோஷங்களுடன் நிறைவு பெற்றது
ADDED : ஆக 26, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான நேற்று அமைச்சர் சக்கரபாணி தொடக்கவுரையாற்றினார். விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட கவுமார மட ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 7:00 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அடியார்கள், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம்,இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு விருது வழங்கினார்.
21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பக்தர்களின் முருகா கோஷங்களுடன் மாநாடு நிறைவுபெற்றது.