/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
/
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
ADDED : பிப் 23, 2025 04:06 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தன்னுடைய வார்டில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைத்த காங்., கவுன்சிலரை மர்ம நபர்கள் வீடு தேடி சென்று மிரட்டிய நிலையில் அவர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு புகாரளித்தார்.
திண்டுக்கல் நாகல்நகர் பெர்பார்க் ரோடை சேர்ந்தவர் கார்த்திக்38. இவர் திண்டுக்கல் மாநகராட்சி 21வது வார்டில் காங்., கட்சியை சேர்ந்த கவுன்சிலராக உள்ளார். இவரது 21 வது வார்டான திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு குற்ற செயல்கள் நடக்கும் நிலை இருந்தது. இதைத்தடுக்கும் விதமாக கார்த்திக், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 21 வது வார்டுகள் முழுவதும் 110 சிசிடிவி கேமராக்களை அமைத்தார். இதனால் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, திருட்டுகள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிக்கலாக இருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் கவுன்சிலர் கார்த்திக், வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை மிரட்டினர். கவுன்சிலர் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். போலீசார் இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
காங்., கவுன்சிலர் கார்த்திக் கூறியதாவது: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் என் வார்டுக்குட்பட்ட
பகுதியில் வருகிறது. இங்கு தினமும் ஏராளமான குற்ற செயல்கள் நடக்கின்றன. வெளியூர் பயணிளும் தங்கள் உடமைகளை பறிகொடுத்து தவிக்கின்றனர். மற்ற பகுதிகளிலும் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறிகளும் நடக்கின்றன. இன்னும் சில விரும்ப தகாத செயல்களும் நடக்கின்றன. இதைத்தடுப்பதற்காக என் சொந்த முயற்சியில் சிசிடிவி கேமராக்களை அமைத்தேன். இதனால் சிலரது தொழில்கள் பாதிக்கப்படுவதால் என் வீட்டிற்கு வந்து மிரட்டுகின்றன. போலீசார் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

