/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடரும் மேகமூட்டம் விவசாயிகள் ஏமாற்றம்
/
தொடரும் மேகமூட்டம் விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : மே 03, 2024 06:37 AM
செம்பட்டி: செம்பட்டி, தர்மத்துப்பட்டி, வீரக்கல் பகுதியில் 4 நாட்களாக மேகமூட்டம் மட்டுமே நீடிப்பதால் மழையின்றி விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
சித்தையன்கோட்டை, அக்கரைப்பட்டி மல்லையாபுரம், வேலக்கவுண்டன்பட்டி, வண்ணம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பலர் கோடை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பெரும்பாலான இடங்களில் உழவு பணிகளை முடித்து கோடை மழையை எதிர்நோக்கி உள்ளனர். வெப்பச்சலன மழை தொடர்பான அறிவிப்புகள் சில வாரங்களாக தொடர்ந்த போதும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க மழை இல்லை.
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் அவ்வப்போது மேகமூட்டம் மட்டுமே காணப்படுகிறது. நான்கு நாட்களாக மாலை நேரங்களில் லேசான சில நிமிட துாறல் மட்டுமே நீடிக்கிறது.