sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து

/

சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து

சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து

சரக்கு வாகன பயணத்தால் காத்திருக்கு ஆபத்து


ADDED : மே 31, 2024 06:10 AM

Google News

ADDED : மே 31, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்கும் தண்ணீரால் அவதி

கொடைக்கானல் ஏரி சாலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், தாழ்வான ரோட்டில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் அதிகரித்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை சீர் செய்ய வேண்டும். கார்மேகம், கொடைக்கானல்.

...........-------

ரோடு பள்ளத்தால் விபரீதம்

வடமதுரை ஆண்டி மாநகர் அருகில் நான்கு வழிச்சாலையில் இருந்து வெள்ளபொம்மன்பட்டி ரோடு பிரியும் பகுதியில் கேபிள் பதிக்க ரோட்டை தோண்டியதால் பள்ளமாக இருப்பதால் டூவீலர் ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர் . - சக்திவேல், வடமதுரை.

................--------

சரக்கு வாகனத்தில் பயணம்

சாணார்பட்டி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களில் அதிகப்படியான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். போலீசார் , போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாண்டி, கோம்பைபட்டி.

..........--------சாக்கடையில் அடைப்பு

முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் ரோட்டில் சாக்கடை மண் மேவி கிடப்பதால் கழிவு நீர் ரோட்டில் செல்வதோடு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. இதை துார்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம் குழந்தை முள்ளிப்பாடி.

...........---------

துாக்கி எறியப்படும் குப்பை

நிலக்கோட்டை காமராஜர் நகரில் வீடுகளின் பின்புறம் குப்பையை துாக்கி எறிவதால் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது . குப்பையை அகற்றுவதோடு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --சினேகா பொன்வாலி, நிலக்கோட்டை.

................----------தொட்டி பணியில் தாமதம்

அம்பிளிக்கை ஆலய கவுண்டன்பட்டியில் மேல் நிலைத் தொட்டி அமைக்க பில்லர் கம்பிகள் நிறுத்தப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் காட்சி பொருளாக உள்ளது . சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கி.ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.

.................----------ரோட்டில் செல்லும் கழிவு நீர்

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லாததால் ரோட்டிலே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்கு சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கவேலு, ஒட்டன்சத்திரம்.---------






      Dinamalar
      Follow us