ADDED : ஆக 22, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கோல்கட்டாவில் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலாஜி,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தீபக்ராஜ்,அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாப்பாத்தி பங்கேற்றனர்.