ADDED : செப் 01, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்கள் வழங்க வேண்டும். 108 மாத பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 1 முன்பாக நடந்த இதற்குதிண்டுக்கல் கிளை 1 தலைவர் பாலு தலைமை வகித்தார்.
மண்டல தலைவர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலர் ஜேம்ஸ் கஸ்பர் ராஜ் பேசினார். மண்டல துணைப் பொதுச்செயலர் பால்ராஜ் நன்றி கூறினார்.